பெண்ணே கவிதையாய் இங்கு.... முட்களோடு வாழ்க்கை சுழலும் ஒவ்வொரு பெண்ணும் கடிகாரமாய் ... ... உள்ளாடும் நினைவுகளில் ஊசலாய் மனசு... எனக்காய் துடிக்கிறது கடிகாரம் உனக்காய் காத்திருந்த கடிகாரம் .... வயோதிகத்தை உணர்த்துகிறது .. கோலூன்றிக்கடக்கும் நொடித்துளிகளில்.. ஒவ்வொரு நா(தா)ளும் ஆணி கொண்டே அறையப்படுகிறது.... கிழியும் தாளின் பின் காத்திருக்கிறது அடுத்த நாளின் துவக்கம் .. அழியாத நம்பிக்கைகள் சுமந்து .. கிழிந்த ஒவ்வொரு தாளிலும் கழிந்த நாளின் சுவைகள் ... மௌனமாய் அசைபோடும் மனசு ஆண்டுகள் கடந்தும் ....... பத்திரப்படுத்திய நாட்காட்டித்தாளில் கட்டாயம் படிந்திருக்கும் உன் நினைவு... |
No comments:
Post a Comment